Friday, January 8, 2010

ஆசை வெட்கம் அறியாது .

அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்..
நாடி நரம்பெல்லாம் புடைக்க பேசியவர்கள் - இன்று
ஆடி அடங்கிப்போய் அடுத்தவர் வாக்கை புடுங்க
வெளிக்கிட்டு விட்டார்கள்.
முற்றும் துறந்த முனிவன் போல
வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாவற்றையும்
முடக்கி வைத்துவிட்டு, நானா? நீயா ?? என
முரண்படத் தொடங்கிவிட்டார்கள்.
கொன்றவனும், தின்றவனும் - இன்று
வாக்குக்காக வாயெல்லாம் தடுமாறி
வழுக்கி விழும் வார்த்தைகளை கேட்க
வலிக்குதையா நெஞ்சு..
மதவாதம், இனவாதம் பேசிய - பரதேசிகள்
இப்ப சம உரிமை என புது வாதம் பேசியபடி...
இருக்கிற ஒரு வோட்டை புடுங்க,
இருக்க வீடே இல்லாமல் நிற்பவனிடம்
இரக்கமேயில்லாமல் இறைஞ்சுகின்றார்கள்...
தங்கள் வாழ்வா? சாவா போரட்டத்தை
அடுத்தவன் வாழ்வில் பரிசோதிக்க
வந்துகொண்டிருக்கிறார்கள்...
வந்துகொண்டே இருப்பார்கள்...
அடுத்த ஆறாவது வருடத்தில் புது அவதாரத்துடன்
அலைந்து கொண்டே இருப்பார்கள்..
இவர்கள் அடங்க மாட்டார்கள்..


No comments:

Post a Comment