Thursday, December 17, 2009

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு புயல் மறுபடியும் மையங்கொள்ள இண்டைக்கு தான் பருவம் வந்திருக்கு. எழுதிறத்துக்கு பல விடயங்கள் இருந்தும் நேரம் கிடைக்காததால எழுத முடியல. ஏன், என்னுடைய வலைப்பூவை கூட பாக்க முடியலை. சரி எண்ட பிரச்சனைகளை விடுவம். எண்ட பிரச்சனைகளை விட்டிட்டு வேற என்ன கண்றாவியை எழுத போறான் எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்குது.

இது வந்து பல விமர்சனங்களுக்கு உள்ளாக கூடிய விடயங்கள் தான். எனினும் எனது மனதுக்கு பட்டதை நான் உங்கள் முன்னே வைக்கிறேன். அண்மையில் எனது நண்பர் ஒருவர் எழுதிய விடயத்தை படித்தேன். அதுக்கு வந்த விமர்சனங்களை படித்த போது, எம்மவர்கள் விளக்கத்துடன் தான் இருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. எனினும் சில விளக்கங்கெட்ட விசமிகள் இன்னும் உயிருடன் இருப்பது வேதனையை அளிக்கிறது. இவர்களுக்கு பகுத்தறிவு வராதவரை பல மனிதர்கள் தங்களை தாங்களே சாமியாராக்கி கொண்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
நான் சொல்லவந்த விஷயம் சாமியாராகும் மனிசர்களை பற்றியில்லை. ஏற்கனவே சாமியார் எண்டு பல பேரால் ஏற்றுகொள்ளப்பட்ட அந்த கடவுள்களை சொல்லி பணம் சம்பாதிக்கும் கூட்டத்தை பற்றித்தான்.
பொதுவாக கோவில்களுக்கு போவதை முடிந்த அளவுக்கு தவிர்த்து கொள்பவன்தான், இருந்தாலும் நிர்ப்பந்தத்தின் பேரில் கோவிலுக்கு போகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். சரி போய் தான் பார்ப்பமே எண்டு போனால், அங்க இருந்த அறிவிப்பு பலகையை பார்த்த போது எனக்கு கோவில் என்ற எண்ணமே உண்மையில் வரவில்லை. ஏதோ, வியாபர தலத்துக்குள்ள போன உணர்வு தான் வந்தது.

அந்த பலகையில கிடந்த விஷயம் என்னவெண்டால், வாற அடியார்கள் (நல்ல ஒரு பெயர் வச்சிடுவான்கள், அடியார்கள், அன்பர்கள், பக்த கோடிகள் எண்டு) எல்லாருக்கும் ஒரு விண்ணப்பத்தை விடுத்திருந்தார்கள். தாங்கள் மிகுந்த பண நெருக்கடியில் இருப்பதாகவும், அன்பர்கள் எல்லாரும் தங்களை நிரந்தர அல்லது சாதாரண உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளும் படியும், அதற்கான கட்டண விபரங்களையும் தெளிவாக காட்சிப்படுத்தியிருந்தார்கள். அதுக்கு ஒரு offer குடுத்திருந்தார்கள் பாருங்கோ, அதுதான் highlight. அதாவது நிரந்தர உறுப்பினராக சேர்ந்தால், வருடத்தில் ஒருதடவை சங்காபிஷேகம் இலவசமாம், சாதாரண உறுப்பினர்களுக்கு மாதம் ஒரு அர்ச்சனை இலவசமாம்.

கடவுளிட்ட போறவை எல்லாருமே தங்களுக்கு காசுவேணும், வீடுவேணும் எண்டுதானே கேக்கிறவை. வேற என்ன பெரிசா கேக்கிறவை. அதுகளிட்ட போய், கடவுளுக்கே காசில்லை, காசு தாங்கோ எண்டு கேக்கிறது சிரிப்பாக்கிடக்கு. பிறகு பூசை எல்லாம் முடிஞ்ச பிறகு பாத்தால், ஐயர் சொல்லுறார், அடியார்கள் அனைவரும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கட்டாம் எண்டு. அப்பத்தான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, என்னடா கோயில் நடத்தவே காசில்லை எண்டு பிச்சை எடுகிறாங்கள், பேந்து சனத்துக்கு சும்மா சாப்பாடு குடுகிறாங்கள். எப்பிடி இவங்களால முடியுது எண்டு பெரிய சந்தேகம் வந்து தலையே வெடிச்சிடும் போல கிடந்தது. சரி எண்டு கூட்டிக்கொண்டு
போனவையிட்டையே கேட்டன், எப்பிடி இவங்களால முடியுது எண்டு. அப்பத்தான் ஒரு உண்மை தெரிந்தது. லண்டனில கோயில் நடத்திறது எண்டு கவுன்சில்ல பதிஞ்சால், கவுன்சில் மாசாமாசம் காசு குடுக்குமாம். அது ஒரு பெரிய தொகை. காசு குடுக்கிறவன் சும்மா குடுப்பனூ. கணக்கு கேப்பன் எல்லே, அதன் இந்த அன்னதான நாடகம். அன்னதானம் எண்டு சொல்லியே கணக்கை முடிச்சிடுவான்கள் எல்லே எங்கட வித்துவான்கள்.

ஆக மொத்தத்தில கவுன்சில் காசு ஒரு பக்கம், அன்பர்கள் குடுக்கும் லஞ்சம் (எனக்கு கடவுள் தருவார் எண்டு , அல்லது கடவுள் தந்தவர் எண்டு நினைச்சு கடவுளுக்கு காசு குடுக்கிறதை லஞ்சம் எண்டு தானே சொல்லவேணும்) மறு பக்கம் எண்டு வருமானம் ஓ..ஹோ.. இப்ப நானும் இடம் பாத்துகொண்டு திரியிறன். ஆகவே தயவு செய்து இதை வாசிக்கும் இலண்டன் வாழ் அன்பர்கள்( அப்பிடித்தானே சொல்லவேணும்) எதாவது நல்ல இடம் இருப்பின் அறியத்தரவும். ஒரு ஐந்து மைல் சுற்று வட்டாரத்துக்கு கோவில்கள் இல்லாமல் இருந்தால் இன்னும் நல்லது. என்னடா இவன் இப்பிடி மாறிட்டனே எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்குது. என்ன செய்ய, நானும் வாழ்கையில செட்டில் ஆகவேண்டாமே, அதன் கஷ்டபடாம முன்னேறுவம் எண்டு முடிவுத்திட்டன். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இங்க நிறைய அன்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை கைவிட மாட்டார்கள் எண்டு நம்பிறன். இந்த நம்பிக்கையில தானே இங்க இத்தினை கோவில்கள் முளைச்சிருக்கு. வெகுவிரைவில் இலண்டனில் புதிய கோயிலை நீங்கள் எதிர்பார்க்கலாம். வரேக்க ஆளாளுக்கு ஒரு 500 பவுன்ஸ் கொண்டு வாங்கோ. உங்களுக்கு ஒண்டு என்ன இரண்டு சங்காபிஷேகம் நடத்திதாறன். இது சத்தியம்.

Friday, September 25, 2009

வெங்காயங்களால் வந்த வினை!!

தலைப்புக்கும் விசயத்துக்கும் என்ன சம்பந்தம் எண்டு யோசிக்காதயுங்கோ, வாசியுங்கோ தெரியும். ஒரு பட்டாம்பூச்சியின் அதிர்வுக்கும், பூகம்பத்துக்கும் தொடர்பு இருக்கு எண்டு 'கயாஸ்' தியரி சொல்லேக்க, என்னுடைய தலைப்புக்கும் விசயத்துக்கும் கூட தொடர்பு இருக்க தானே வேணும். ஆகவே மறுபடியும் சொல்லுறன் யோசிக்காதயுங்கோ, வாசியுங்கோ.

'cricket is a gentile man game ' எண்டதை நேற்றும் நிருபித்தார் இங்கிலாந்து அணித்தலைவர் Andrew Strauss. நேற்று நடந்த இங்கிலாந்து இலங்கை மேட்ச் பாத்தவர்களுக்கு தெரியும் நடந்தது. பாக்காதவைக்கு ஒரு சின்ன re-play.

இலங்கை அணி வீரர் Mathews எதிர்கொண்டது இங்கிலாந்து அணி வீரர் onions வீசிய பந்தை. பந்தை 'long on ' திசைக்கு அடித்துவிட்டு ஒரு ஓட்டத்தை எடுத்துவிட்டு மறு ஓட்டம் எடுக்க முற்படும் வேளையில் எதிரே வந்த பந்து வீச்சாளருடன்(Onions) மோதுண்ட காரணத்தால் runout ஆகவேண்டிய சந்தர்ப்பம். நடுவர்கள் கூடி ஆலோசித்து Mathews ஆட்டம் இழந்ததை உறுதி செய்தனர். Mathews மனமில்லாமல் மைதானத்தை விட்டு வெளியெறிவிட்டார். முரளி கூட உள்ளே இறங்க ஆயத்தமான வேளையில் உள்ளே இருந்து அழைப்பு. களத்ததுக்கு மீண்டும் அழைக்கப்பட்டார் Mathews. அழைத்தவர் நடுவர் என்றாலும், அழைக்க சொல்லி கட்டளை இட்டவர் இங்கிலாந்து அணித்தலைவர் Strauss. நடுவர் அறிவித்த தீர்ப்பை மாற்ற கூடிய அதிகாரம், அதாவது ஆட்டம் இழந்தாலும் மறுபடி கூப்பிடக்கொடிய அதிகாரம் எதிரணித்தலைவருக்கு மட்டுமே உண்டு. Mathews ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் சக வீரர்களுடன், குறிப்பாக Onions உடன் கலந்தாலோசித்த Strauss உடனடியாக Mathews ஐ கூப்பிடுமாறு நடுவர்களுக்கு அறிவித்தார். batting powerplay எடுக்க போகும் தறுவாயில் அரைச்சதம் கடந்த ஒரு வீரரை மீண்டும் அழைப்பது என்பது தற்கொலைக்கு சமன். என்றாலும் விளையாட்டை விளையாட்டாக மட்டும் கருதி Strauss அவரை மீண்டும் களத்ததுக்கு அழைத்தது ''cricket is a gentile man game ' தான் என்பதை எடுத்துக்காட்டியது. இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு வீரரை அதுவும் அரைச்சதம் கடந்து, நல்ல போர்மில் இருக்கும் ஒருவரை மீண்டும் அழைக்கும் மனநிலை இலங்கை அணித்தலைவர் சங்ககாரவுக்கோ, இல்லை அவுஸ்ரேலிய முன்னாள் தலைவர் பொன்டிக்குக்கோ, ஏன் இந்திய அணித்தலைவர் தோனிக்கோ வருமா என்பது சந்தேகமே.

என்றாலும் உள்ளே வந்த mathews வாய்ப்பை சரிவர பயன்படுத்தாமல் ஆட்டமிழந்தது இலங்கை அணிக்கு ஏமாற்றமே. போகும் போது நன்றி கூறிச்சென்ற mathews இக்கு பாரட்டத்தான் வேணும். இது எல்லாத்துக்கும் காரணம் வெங்காயங்கள் தான். என்ன விளங்கலையோ? அதன் Graham Onions ஐ தான் சொன்னான். onions எண்டால் தமிழ்ல வெங்காயங்கள் தானே. இந்த வெள்ளைக்கராங்களுக்கு பெயருக்கு பஞ்சம் போல. வெங்காயம், வெள்ளை, பிரவுன், மணி(bell ), கொல்லன்(smith ) எண்டு எல்லாம் பெயர் வைக்கிறாங்கள். வெளிநாடு வாழ் தமிழ் மக்களே!! நீங்கள் கண்டு பிடித்து வைக்கும் அந்த வாயில் நுழைய கஷ்டப்படும் பெயர்களை கொஞ்சம் வெள்ளைக்கராங்களுக்கும் சொல்லுங்கோவன். உங்களுக்கு புண்ணியமாப் போகும்.

இண்டைக்கு ஒரு நல்ல சண்டை, மனிக்கவும் மேட்ச் இருக்கு. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் செஞ்சூரியன் பார்க்ல! உலகிண்ண வரலாற்றில் ஒருதடவையும் பாகிஸ்தானிடம் தோல்வியடையாத இந்தியா இன்றும் அதை தக்க வைக்குமா, இல்லை இன்று வென்று சரித்திரத்தை மாற்றுமா பாகிஸ்தான் என்பதை பார்க்கும் ஆர்வம் உங்களைப்போல் எனக்கும் இருக்கிறது. நாளைக்கு சிங்கபூரில பார்முலா ஒன்(formula 1)கார் ரேஸ் வேற இருக்கு. பொழுது போக்குக்கு குறைவில்லை.

Saturday, September 19, 2009

உன்னைப்போல் ஒருவன் - நமக்கு வேண்டும்


காலையில் வீட்டுக்கு காய் கறி வாங்கப்போகும் ஒருவன், மாலையில் வீடு திரும்புமுன் செய்யும் ஒரு திருவிளையாடலே உன்னைப்போல் ஒருவன். பத்து மணி நேரத்துக்குள் முடிந்துவிடும் ஒரு சம்பவம். முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் என்ற பழமொழிக்கிணங்க, தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதமே சரி என்பது படத்தின் ஆன்லைன். வழமையான தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களம். முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைக்கதைப்பாணி. இன்று நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு எதையும் செய்து முடிக்கலாம் என்ற நிலையில், இந்த கதையின் நாயகனும் ஒரு மொட்டைமாடியில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு போலிஸையே, ஏன் தமிழ்நாட்டு அரசாங்கத்தையே ஆட்டுவிக்கும் உத்தி சினிமாவுக்கு புதியது என்ற சொல்லலாம். பாட்டு இல்லை, சண்டையில்லை, கதாநாயகி கூட இல்லை. எல்லாவற்றையும் தாண்டி கமலின் டிரெட்மார்க் முத்தம் கூடயில்லை. ஆனாலும் படத்தை ரசிக்க முடிகின்றது. படத்தில் ஒரு வேகம் இருக்கின்றது என்பதை ஒப்புகொள்ளதான் வேணும். வளவளவென்று இழுத்தடிக்காமல், ஆங்கில படப்பாணியில் இரண்டு மணிநேரத்துக்குள் படம் முடிவது கனகச்சிதம்.


தமிழ் நாட்டில் ஆங்காங்கே குண்டு வைத்துவிட்டு, நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க கேட்கிறார் கமல். போலிஸ் தீவிரவாதிகளை விட்டாதா?, விடுபட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நீங்கள் திரையில் தான் காணவேண்டும். போலிஸ் கமிஷனராக வரும் மோகன்லால் கமலுக்கு போட்டியாக நடித்திருக்கிறார். தான் ஒரு கேரளா மாநிலத்தவன் என்பதை சொல்லிடிகாட்டுவதில் என்ன அவசியம் வேண்டியிருக்கிறது என்று தெரியவில்லை. மலையாளம் கலந்த தமிழ் அழகாகத்தான் இருக்கிறது. கூடவே வரும் இரண்டு பொலிஸ்காரர்களும் பின்னி பிடலுடுக்கிறார்கள். குறிப்பாக கணேஷ் வெங்கட்ராமன் தமிழ் சினிமாவில் அக்சன் ஹீரோகளுக்கு ஒரு ஆப்பு வைக்கலாம், வைக்காமலும் போகலாம். அதிகார மட்டங்களுக்கிடையே நடக்கும் சம்பாசனைகள் மிகவும் கூர்மையானவை. லக்ஷ்மிக்கு மோகன்லால் சொல்லும் பதில்கள் அருமை. அதற்காக இரா. முருகனுக்கு ஒரு 'சபாஷ்' சொல்லலாம். படம் முழுக்க கிளோஸ்அப் காட்சிகள். முதல்வர் என்று டம்மி பீசைக்காட்டாமல், நிஜ முதல்வரின் குரலை பாவித்தது நல்ல முயற்சி. முதல்வரின் வீட்டிலும் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.


கடைசியில் கமல் கொடுக்கும் கொள்கை விளக்கவுரையில் காட்டும் உணர்ச்சிகள் ஏராளம். சோகம், இயலாமை, ஏக்கம், தவிப்பு, அழுகை என்று அத்தனையையும் காட்டி இறுதியில் நின்று, நிதானித்து கண்டிப்புடன் கூறும் அழகே தனி. "தீவிரவாதி என்று மிரட்டினால் பயத்துடன் கேட்கும் நீங்கள்(போலிஸ்), நான் ஒரு சாதரணன் என்று தெரிந்தவுடன் குரலை ஏற்றுகிறீர்கள், நானும் ஒரு தீவிரவாதி தான். தீவிரவாதத்தை ஒழிக்கும் தீவிரவாதி" என்ற வசனங்கள் பிரமாதம். தனது பெயர் வாக்காளர் அட்டையில் இல்லாமல் போனதையும் நாசூக்காக குறிப்பிட தவறவில்லை கமல். இரா. முருகனின் வசனங்கள் அருமை. பின்னணி இசைக்கும் ஒரு 'ஓ' போடலாம். சில இடங்களில் பின்னணி இசை மௌனித்திருபதும் அற்புதம். படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் உண்டு என்றாலும் கதைக்கு பொருந்துகிறது.


இந்த மாதிரியான படங்கள் வருவது இதுதான் முதல்தடவை அல்ல. ஆனாலும் வந்த படங்களுக்கு நடந்த சம்பவங்களை நாடறியும். உதாரணம், எவனோ ஒருவன். அவ்வாறு இந்தப்படமும் போகமல் இருப்பது ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது. கலைஞர்களின் ரசிப்புத்திறமை எப்போது ரசிகர்களுக்கு வருகிறதோ அன்று தான் இந்த மாதிரியான முயற்சிகள் வெற்றியீட்டும் என்பது எனது எண்ணம். உன்னைப்போல் ஒருவன் -New face of terror.

உன்னைப்போல் ஒருவன்- எனது பார்வையில்.


முள்ளை முள்ளால் தான் எடுக்கமுடியும் என்ற பழமொழியின் தத்துவத்தை தாங்கி தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதமே சரி என்று சொல்லும் படம். ஹிந்தியில் வந்த 'எ வெனிஸ்டே' என்ற படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. அதனால் அந்த படத்தின் திரைக்கதைக்கும் இந்த படத்தின் திரைக்கதைக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராயும் அருகதை எனக்கில்லை. என்றாலும் உன்னைப்போல் ஒருவனின் திரைக்கதைப்பாணி நன்றாகவே இருக்கிறது. அடிப்படையில் நான் ஒரு கமல் சினிமாவின் வெறிப்பிடித்த ரசிகன் என்றாலும் அவரது எல்லா படங்களையும் போற்றி, ஆராதித்து புளகாங்கிதம் அடையும் மனப்பான்மை இல்லாதவன். கமலின் ரசிகன் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வந்து இந்த படத்தை பற்றி பேசுவனேயானால், இதை ஒரு சமுதாய சீர்திருத்த கருத்தை/தேவையை வலியுறுத்தும் படமென்றே சொல்லுவேன். இது போல பல படங்கள் வந்திருக்கின்றன. உதாரணத்துக்கு 'எவனோ ஒருவன்' என்ற படத்தை கூறலாம். தனி ஒரு மனிதன் (கமல் சொல்லும் அந்த 'common man') சமூகத்தின் மேல் கொண்ட காதலினால் சட்டத்தை தன் கையில் எடுப்பதனால் வரும் பின்விளைவுகளை காட்டிய படம் 'எவனோ ஒருவன்'. ஆனல் அந்த படத்துக்கு கிடைத்த மரியாதையை/வரவேற்ப்பை நீங்கள் அறிவீர்கள்.


உன்னைப்போல் ஒருவனும் அந்த வகையிலேயே வருகிறது. படத்தின் கதையை நான் இங்கே சொல்லுவது எழுத்துலக தர்மம் ஆகாது. கோடிகளை கொட்டி எடுத்த அந்த திரைக்காவியத்தை நீங்கள் திரையில் கண்டுகளிப்பதே நல்ல சினிமாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு. ஆயினும் படத்தில் வரும் சுவாரசியமான சில சம்பவங்களை பகிர்வது ஒன்றும் பெரிய குற்றமில்லை என்று கருதுவதால் இங்கே சில விடயங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.


கமலின் பெயர் வாக்காளர் அட்டையில் இல்லாமல் போனதை இங்கே நாசூக்காக சொல்லியிருப்பார். தன்னை 'common man' என்று சொல்லிக்கொள்ளும் கமலை மோகன்லால் கேட்பார் 'நீ என்ன கமான் மானா? இல்லை சுப்பர் மானா? (are you a 'common man' or superman?)என்று ' அதற்கு கமல் 'இல்லை நான் இன்விசிபிள் மான்(invisible man)' என்று சொல்லுவார். வாக்காளர் அட்டையில் பெயரில்லாத ஒருவன் இன்விசிபிள் மான் தானே என்று கேட்பார். அதில் அர்த்தம் இருக்கிறது. அதேபோல இன்னும் ஒரு காட்சியில் மோகன்லாலும், முதல்வரும் பேசிக்கொள்ளும் போது, மோகன்லால் சொல்லுவர், "எல்லாம் கடவுள் கையில்தான் உண்டு"(every thing is in god's hand) என்று. அதற்கு முதல்வர், "அது சிக்கலான கையாச்சே" என்று பதிலுரைப்பார். காலம் காலமாக கமல் தனது படங்களில் முன்வைக்கும் நாத்திக கருத்தின் வெளிப்பாடே இந்த வசனம்.


தமிழ் சினிமாவின் அடிப்படை விதிகளை மீறி தைரியமாக கமல் கொடுத்திருக்கும் ஒரு படமாகவே இதை காண்கின்றேன். நான்கு பாடல், இரண்டு சண்டைக்காட்சி, கிளாமர் ஹீரோயின் என்ற போர்முலாவை தாண்டி, கதாநாயகி இல்லாமல், படத்தில் வரும் எல்லோருக்கும் சம அளவு கனத்தை கொடுத்திருகிறார். தன்னை பின்நிலைப்படுத்தி சக பாத்திரங்களைக்கொண்டு கதையை நகர்த்தியிருப்பது தமிழ் சினிமாவுக்கு புதியது. அதேபோல பாடல் காட்சிகள் இல்லாமல் பயணித்திருப்பதும் நன்றாக உள்ளது(உண்மையில் இந்தபடத்துக்கு பாடல் காட்சிகள் வைக்கமுடியாது). சரித்திரத்தை திரும்பிப்பார்தால், தமிழ் சினிமா ரசிகர்கள் இம்மாதிரியான முயற்சிகளுக்கு காட்டிய/ கொடுத்த ஆதரவு குறைவு என்றே சொல்லலாம். எனினும் கமலின் இந்த முயற்சி வெற்றியளிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. ஒட்டுமொத்த சமூகமும் உணர்ந்து திருந்தினாலன்றி தனியொரு மனிதன் திருந்திப்பயனில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து.

Thursday, September 10, 2009

A9 வீதியால் போய் இருப்பாரோ மனுஷ்யபுத்திரன்?

இந்த வாரம் வெளிவந்திருக்கும் உன்னைப்போல் ஒருவன் படத்தில் உள்ள ஒரு பாடல் எனக்கு பிடித்திருக்கிறது. கமலஹாசன் பாடிய, மனுஷ்யபுத்திரன் எழுதிய 'அல்லா ஜானே' என்று தொடங்கும் பாடல் வரிகள் உண்மையிலேய அருமையாக உள்ளது. எனக்கு என்ன சந்தேகம் எண்டால், இந்த பாடலை எழுதிய மனுஷ்யபுத்திரன் கிட்டடியில A9 வீதியூடாக பயணம் செய்திருப்பரோ என்பது தான்.

சரணத்தின் தொடக்கம் பிரமாதமாக உள்ளது.
"வீதிகள் எங்கும் வேதனை நிழல்கள்
வீடுகள் எங்கும் விம்மிடும் குரல்கள்
வீட்டுக்கு போகும் பாதைகள் எங்கே?
வேட்டை முடிந்து திரும்புதல் எங்கே?"

அண்மையில் A9 வீதியூடாக யாழ்ப்பாணம் சென்ற எனது நண்பர்களின் வாயிலாக நான் அறிந்த விடயம் யாதெனில், ஓமந்தை தொடக்கம் முகமாலை வரையிலான A9 வீதியின் இரு மருங்கும் கண் கொண்டு பாக்கமுடியாதபடி இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது. A9 வீதியெங்கும் வேதனையின் நிழல்கள் தான் நிழலாடுகிறது. அங்கே உள்ள வீடுகளில் எல்லாம் விம்மிடும் குரல்கள் கேட்டுக் கொண்டிருக்கும். தங்கள் வீட்டுக்கு போகும் பாதையை தொலைத்தவர்களே அநேகம் பேர். அரச பயங்கரவாதம் தன் வேட்டையை முடித்து விட்டது. நாங்கள்(குறிப்பாக நான்) இது பற்றி பேச அருகதை இல்லாதவர்கள். அங்கே மக்கள் அனுபவித்த, அனுபவித்து கொண்டிருக்கின்ற கொடுமைகளில் ஒரு சத விகிதமேனும் அனுபவியாதவர்கள். சும்மா வெறுமனே தொலைக்காட்சிகளில் காண்பிக்கும் வீடியோக்களை பார்த்து பெரு மூச்சு விடுவதோடு நமது அனுதாபம் முடிந்து போகின்றது என்பதே உண்மை.
எனக்கு பிடித்த அந்த கவிவரிகள் இங்கே முழுமையாக,
அல்லா ஜானே அல்லா ஜானே
கண்ணீர் அறியாக் கண்களும் உண்டோ?
மண்ணில் பெருகா குருதியும் உண்டோ?
நன்மைகள் தீமைகள் யார்தான் அறிவார்?
நாளையின் தீர்ப்பை யார் தான் தருவார்?

வீதிகள் எங்கும் வேதனை நிழல்கள்
வீடுகள் எங்கும் விம்மிடும் குரல்கள்
வீட்டுக்கு போகும் பாதைகள் எங்கே?
வேட்டை முடிந்து திரும்புதல் எங்கே?

பிள்ளைகள் நடுங்கும் பேய்களின் நடனம்
பேரீருள் இன்று நிலவினை திருடும்
அழிந்தவர் குரல்கள் சுவர்களில் கேட்கும்
அடுத்தவர் மொழிகள் திசைகளை அசைக்கும்

வெல்பவர் எல்லாம் போர்களில் இங்கே
வீழ்ந்தவர்க்கெல்லாம் பெயர்களும் இல்லை
முகங்கள் இல்லா மரணத்தின் பாதை
முடிவோன்றும் இல்லா அழிவின் பாதை

முழுக் கவிவரிகளுமே நமக்கு பொருந்துமாற் போல் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் கூட கவிப்பேரரசு வைரமுத்துவின் பேனா உதிர்த்த வரிகளும் எங்கள் சோகத்தை செல்வதாக இருந்தது. இது பற்றி 'கிடுகு வேலியில்' ஒரு பதிவை இட்டுள்ளார். இவை தற்செயலா, இல்லை அறிந்து செய்யப்படாதா என்று தெரியவில்லை. எது எவ்வாறாயினும் எமக்காக அழ, அனுதாபப்பட சில ஜீவன்கள் இருக்கின்றது என்பது சந்தோசமளிகின்றது.

Saturday, September 5, 2009

அவளா? நானா??


இண்டைக்கு காலம (காலையில) 'வாயு புத்திரனின்' ஒரு மாதிரியான பக்கத்தை வாசிச்சுகொண்டிருந்தன். "ஒரு மாதிரியான பக்கம்" எண்டவுடன நீங்கள் தப்பா நெனைக்க கூடாது.. அது அவர் எழுதிற பதிவு.அவருடைய யாழ் கொழும்பு பிரயாணத்தை பத்தி தன்னுடைய நகைச்சுவை கலந்த பாணியில எழுதியிருந்தார். நல்ல இருந்திச்சு. இப்ப விஷயம் அதில்ல. அவர் சொன்ன விஷயம் ஒண்டு எண்ட மனசில பதிஞ்சிருந்தது. அதாவது கொழும்பில இருந்து யாழ்ப்பாணம் போட்டு திரும்ப வாறத்துக்கு விமானத்தில டிக்கட் எடுத்தால் ஒரு மாச சம்பளம் கரைஞ்சு போகும் எண்டு கவலைப் பட்டு கொண்டிருந்தார். அது எண்டால் உண்மை தான். அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்யவும் முடியாது. இந்த விமான கட்டணம் தொடர்பாக பாரளுமன்றத்தில கூட கதைச்சவையாம். அங்க கதைச்ச ஒரு எம்.பி. ஒராள் சொன்னாரம் கொழும்பில இருந்து சென்னைக்கு போட்டு வாறத்துக்கு 12000 காணும், ஆனா உங்க பக்கத்தில இருக்கிற யாழ்ப்பாணம் போட்டு வாறத்துக்கு 25000 வேணுமாக் கிடக்கு எண்டு. அந்த மனிசன் சொன்னதில தப்பில்ல. ஆனால் யாருக்கு சொன்னது எண்டது தான் பிழை. எங்கட அரசாங்கத்தை பத்தி தெரியும் தானே. காசை குறைக்க மாட்டினம். பதிலுக்கு சென்னைக்கு போட்டு வாறத்துக்கு இருக்கிற காசை கூட்டி போட்டு சொல்லுவினம், இப்ப பாருன்கோ, சென்னைக்கு போட்டு வர 40000 , யாழ்ப்பாணம் போட்டு வர ஆக 25000 தானே எண்டு. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி எண்ட கணக்கா போடும்

நான் அந்த அரசியல பத்தி கதைக்க வரேல்ல. நான் கதைக்க வந்த விஷயம் என்னவெண்டால் இப்ப விமான பயணங்கள் எண்டது பஸ் பயணம் மாதிரி மலிஞ்சு போட்டு எண்டத பத்தி தான். அட, அவசரப் படாதேயுங்கோ. இது நடக்கிறது இலங்கையில இல்லை, வெளி நாடுகளில. இந்தியாவில கூட இப்ப மலிவு கட்டண விமான சேவை நிறுவங்கள் இருக்கு. ஐரோப்பிய நாடுகளிலையும் இருக்கு. மலேசியாவில 'air asia' எண்டு சொல்லி ஒரு நிறுவனம் இருக்கு. சொன்னால் நம்ப மாட்டியள், கோலாலம்பூரில இருந்து சிங்கப்பூருக்கு போக வெறும் 39 ரிங்கிட்(மலேசிய காசு)தான். நான் ஒருக்கா அதில சிங்கப்போருக்கு போட்டு வந்தனான். விட்டில இருந்து ஏர்போட்டுக்கு போக டக்ஸிக்கு 35 ரிங்கிட் கொடுத்தது வேற கதை. ஆனால் பஸ்ஸில போறத்துக்கே நாப்பத்தஞ்சு,அம்பது ரிங்கிட் தேவைப்படும். அதோட பஸ்ஸில போக குறஞ்சது அஞ்சு மணித்தியாலம் தேவைப்படும். பஸ்சில போறதும் ஒரு சுகமான அனுபவம் தான். முந்தி ஓமந்தை, தாண்டிக்குளம் தாண்டி போற மாதிரித்தான் இதுவும் . மலேசிய மற்றும் சிங்கப்பூர் குடிவரவு/குடியகல்வு நிலையங்களில இறங்கி ஏற வேணும். இந்த சில்லேடுப்பிலும் பாக்க பிளேன்ல போனால் நல்லது எண்டு நினைச்சன்.

நான் சொன்னது ஒரு உதாரணத்துக்கு. இப்பிடி எல்லா இடத்துக்கும் போகலாம். இப்ப புதுசா கொழும்புக்கும் ஓடத்துவங்கிட்டாங்கள். முன்னுக்கே டிக்கட் பதிவு செய்து வைச்சால் கொழும்பில இருந்து கோலாலம்பூர் வந்து போக எங்கட காசுக்கு 15000 மிச்சம் என்ன. ஆனால் சில நிபந்தனைகள் இருக்கு. மற்ற விமானங்களில தாறமாதிரி சும்மா சாப்பாடும் தண்ணியும் (தண்ணி எண்டால் விளங்கும் தானே) தரமாட்டினம். உள்ளுக்க கொண்டு திரிஞ்சு விப்பினம். வேணும் எண்டால் வாங்கலாம். வேண்டாம் எண்டால் கண்ணை மூடிக்கொண்டு தூங்கலாம். நான் ஏன் துங்கவேணும் எண்டு சொல்லுறன் எண்டால், நீங்கள் நித்திரை இல்லை எண்டால் அவையள் (அது தான் விமான பணிப் பெண்கள்) உங்களை பாத்து, "sir don't you like to have something?" எண்டு நுனி நாக்கு ஆங்கிலத்தில கேப்பினம். ஆக்கள் வேற பாக்க அம்சமா இருப்பினம். என்னை மாதியான ஆக்கள் எண்டால் வேற வழியில்லாமல் இல்லை எண்டு மறுக்க முடியாமல் ஓம் எண்டு மண்டைய ஆட்டி வாங்கி போடுவம். அது வேற தண்டச் சிலவாப் போடும். அதுக்கு தான் சொல்லுறது அவை வாறினம் எண்டால் சத்தம் போடமல் நித்திரை மாதிரி கிடக்கவேண்டியது தான். உண்மையில பசிச்சால் சாப்பிடலாம். அடுத்தது போக்கிறத்துக்கு பெட் சீட் தரமாட்டினம். கதிரைக்கு முன்னால டிவி இருக்காது. மத்தப்படி எல்லாம் ஒண்டு தான்.

இப்படித்தான் நான் போகேக்கையும் ஒரு பெம்பிளை சாப்பாடு விட்டு கொண்டு வந்தா. எனக்கு பக்கத்தில இருந்த மனுசனும் மனிசியும் வங்கிச் சாப்பிட்டிசினம். நான் ஏலவே ஏர்போட்டில இருந்த subway ல சாப்பிட்டிட்டுத் தான் போனனான். டக்ஸிக்கு அநியாயமா 35 ரிங்கிட் குடுத்திட்டன் எண்ட கடுப்பு வேற. இதுக்க அவள் நிக்கிறாள் வாங்கு எண்டு கொண்டு. என்னுடைய மானத்த வங்கிறதில அவளுக்கு அவ்வளவு சந்தோசம் போல கிடக்கு. ஆள் வேற பாக்க செமையா இருந்தாள். என்ன செய்ய வேற வழியில்லாமல் ஒரு கோப்பியும் சன்விச்சும் வங்க வேண்டியத போச்சு. அதுக்கு 10 ரிங்கிட் வங்கிப்போட்டாள் அறுவாள்.என்ன தான் எண்டாலும் மற்ற விமான சேவை நிறுவனங்களோட ஒப்பிடேக்க இது சரியான மலிவு என்ன. இப்ப எங்கட பெடியள் ரண்டு பேர் மலேசியாவுக்கு வாறத்துக்கு இருக்கினம். அவையளும் இந்த மலிவு கட்டண விமானத்தில தான் வரபோகினமாம். அவையும் வந்த பிறகு நானும் அவங்களோட சேர்ந்து இங்க மலேசியாவில லங்காவி எண்ட தீவுக்கு போற பிளன்ல இருகிறன். அதுவும் இந்த மிளிவு கட்டண விமானத்தில தான். உண்மைய சொன்னால் பஸ்ஸில போறாத விட காசும் குறைவு, நேரமும் மிச்சம் என்ன. இந்த முறை நான் உள்ளுக்க சாப்பாடு வாங்கிற ஐடியா இல்லை. இந்த முறை அவளுகள் என்ன மாயம் மந்திரம் செய்ய போறாளுகளோ தெரியல. பாப்பம் கடைசில வெல்லுறது நானா இல்லை அவளா எண்டு..

Sunday, August 30, 2009

இப்பிடியும் மனிசன் சந்தேகப்படுவானோ

எனக்கொரு சந்தேகம் இருக்குது ...
நீங்கள் எல்லாம் இப்பிடி சந்தேகப் படுவீங்களோ எண்டு
எனக்கொரு சந்தேகம் இருக்குது ...
முதல்ல யார் சந்தேகத்துக்கு சந்தேகம் எண்டு
பெயர் வைச்சாங்கள் எண்டு பெரிய சந்தேகம்.....
சந்தேகத்துக்கான மூல காரணி என்னவேண்டும் சந்தேகம்
காரணம் இல்லாமல் சந்தேகப் பாடுவாங்களா எண்டு சந்தேகம்
இல்லை காரணத்தோடை தான் சந்தேகப் பாடுவாங்களா எண்டு சந்தேகம்
சந்தேகங்கள் வாறதால நன்மையா தீமையா எண்டு சந்தேகம்
நன்மை தான் கூட எண்டால் ஏன் சந்தேகப்படக்கூடாது எண்டு
நிறையப்பேர் சொல்லுறவை எண்டு சந்தேகம்
இல்லை தீமை தன் கூட எண்டு சொன்னால், அப்ப ஏன்
இப்பவும் ஆக்கள் சந்தேகப் பட்டுகொண்டிருக்கினம் எண்டு சந்தேகம்
சந்தேகத்துக்கும் சந்தோசத்துக்கும் எதாவது
தொடர்பு இருக்குதோ எண்டு சந்தேகம்
அப்பிடி தொடர்பு இருக்கும் எண்டால் அது நேர் விகித சமனோ
இல்லை நேர் மாறு விகித சமனோ எண்டு சந்தேகம்
இந்த சந்தேகம் எண்டதே இல்லாமல் இருந்திருந்தால்
உலகம் எப்பிடி இருந்திருக்கும் எண்டு சந்தேகம்
நான் இப்பிடி சந்தேகப்படுறதால நீங்கள் எல்லாம்
"இவன் ஒரு சந்தேகப் பிராணி" எண்டு சந்தேகிப்பிங்களோ
எண்டு அடி மனதில ஒரு சந்தேகம்
இப்பிடி பாக்கப் போனால் எனக்கு ஒரு சந்தேகம் மட்டும் இல்லை,
பல சந்தேகங்கள் உண்டு என்பதில சந்தேகமில்லை
இப்பிடி கணக்குவழக்கில்லாமல் சந்தேகப் பட்டால் எனக்கு
என்னவும் ஆகிடுமோ எண்டும் சந்தேகமா கிடக்கு
அப்பிடி என்னவும் ஆகினால் எண்ட நிலைமை என்னவாகும் எண்டு சந்தேகம்
இந்த சந்தேகங்களை எல்லாம் போக்க உங்கள் யாரவது
ஒருவரலாவது முடியுமா எண்டு சந்தேகம்
அப்பிடி ஒருவரால முடிஞ்ச தயவு செய்து
எனது சந்தேகங்களை தீர்த்து வைக்கவும்..
உங்களுக்கு எண்ட சந்தேகங்ளைப் பற்றி ஏதாவது
சந்தேகம் இருந்தால் தயங்காமல் என்னட்டை கேளுங்கோ
ஏன் எண்டால் நான் பட்ட சந்தேகங்களை நீங்களும்
படக்கூடாது பாருங்கோ...

Friday, August 28, 2009

மதம் என்னும் மதம் ஓயட்டும்

மதம், உலகில் உள்ள சகல மக்களாலும் அறியப்பட்ட ஒரு பொதுச் சொல். மனித இனத்தின் தோற்றம் தொட்டே வழிபாடு எனும் ஒரு செயலும் இருந்து வருகின்றது என்பதை பண்டைய ஆய்வுகளின் மூலமாக அறிய முடிகின்றது. ஆதி காலத்தில் இயற்கையின் சீற்றத்திற்கு அஞ்சிய மனிதன் அதை தன்னிலும் மேலான ஒரு சக்தியாகக் கருதி வழிபடத்தொடங்கினான். ஆக ஒரு வித பயவுணர்வின் காரணமாக தன்னை பாதுகாத்து கொள்ளும் முகமாக இயற்கைச் சக்திகளான மழை, இடி, மின்னல், நெருப்பு, காற்று ஆகியவற்றை கடவுளாக உருவகித்து வழிபட்டு வந்தான். நாகரீக வளர்ச்சிக்கு இணங்க அவனின் வழிபாட்டிலும் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. அருவ வழிபாடு உருவ வழிபாடாக தோற்றம் பெற்றது. கடவுள்கள் தோற்றம் பெற்றனர். தங்களை காக்கும் சக்தியாக உருவகித்து அவர்களுக்கு உருவம் ஒன்றை கற்பனை செய்து வழிபடத்தொடங்கினான். இதுவே மதம் என்ற ஒன்றின் ஆரம்ப கட்டமாகும். இதுவே இந்து மதம் என்று அறியப்படுகின்றது.

இவ்வாறு தோற்றம் பெற்ற இந்து மதத்தில் காலப்போக்கில் பல பிளவுகள் ஏற்பட்டன. சைவம், வைஷ்ணவம், காணபத்தியம், கெளமாரம், செளரம், சாக்த்தம் என்று ஆறு சமயங்களாக பிளவு பட்டன. இந்த சமயங்களினிடையே பல்வேறுபட்ட பிரச்சினைகள் நடந்தமைக்கான ஆதாரங்கள் இன்றும் உள்ளன. உதாரணத்திற்கு சிவனை கடவுளாக கொண்ட சைவமும், விஷ்ணுவை கடவுளாக கொண்ட வைஷ்ணவமும் தமக்குள் மோதிக்கொண்டதாக கூறப்படும் சம்பவங்களை பழைய இதிகாசங்கள் மற்றும் புரானம்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

இது போக, இந்தப் பிரிவு போதாது என்று இந்து மதத்திலே குறைகள் உள்ளன, அவை மக்களை சரியான வழியில் வழிநடத்தவில்லை என்று கூறிக்கொண்டு பௌத்தமும், அதுவும் சரியில்லை என யூதமும், அதிலும் குறை என்று கிறீஸ்தவமும், அதுகூட முழுமை இல்லையெனக் கூறிக்கொண்டு இஸ்லாமுமாக இன்று பல்வேறுபட்ட மதங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இந்த எல்லா மதங்களினதும் குறிக்கோள் எமது சக்திக்கு அப்பாற்பட்டதாக கருதப்படும் கடவுளை அடைவதற்கான வழியை காட்டுவதே என்று சொல்லப்படுகிறது. கடவுள் என்று சொல்லுமிடத்து, எம்மால் அறியப்படமுடியாத, எமது சக்தியை மிஞ்சிய ஒரு சக்தியையே குறிக்கின்றது. அவ்வாறு எம்மிலும் விஞ்சிய ஒரு சக்தி உண்டென ஒப்புக்கொள்ளுமிடத்து, அது ஒரு கடவுளாக மட்டும் இருக்கமுடியுமே அன்றி கடவுள்கள் என பன்மையாக இருப்பது சாத்தியம் அற்றதாகின்றது. இவ்வாறன ஒரு முடிவுக்கு நாங்கள் வரும்போது, மேற்கூறியதை போன்ற பல்வேறுபட்ட மதங்களும்; சிவன், விஷ்ணு, இயேசு, அல்லா, புத்தன் என்னும் பல்வேறுபட்ட கடவுள்களும் இருப்பதாக சித்தரிக்கப்படும் விதம் பகுத்தறிவு கொண்ட எமக்கு ஒரு நம்பகமில்லத்தன்மையையே தோற்றுவிக்கின்றது.

நான் இங்கு கடவுள் என்று ஒருவர் இருக்கின்றாரா இல்லையா என்று வாதிட வரவில்லை. எம்மில் பெரும்பான்மையான மக்களால் நம்பப்படும் அந்த கடவுளின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை பற்றியே வாதிட வருகின்றேன். இன்று உலகில் நடைபெறும் கொலைகள் வன்முறைகளில் 80 சதவிகிதமான பங்கு கொலைகள் மதத்தின் பெயராலேயே நிறைவேற்றப்படுகின்றன எனது வருத்தத்திற்குரிய விடயமாகும். கிறீஸ்தவமும் இஸ்லாமும், இஸ்லாமும் இந்துவும் மூதிக்கொண்டதற்கான சாட்சிகள் நிறையவே உள்ளன. மும்பை கலவரம், குஜராத் கலவரம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அல்லாவுக்கு இருந்த கோயிலை இடித்துவிட்டு அதிலே ராமருக்கு குயில் கட்டுவதில் என்ன தர்மம் இருக்கின்றதோ தெரியவில்லை. பலஸ்தீனமும், இஸ்ரேலும் இன்றும் முட்டி மோதிக்கொள்ளும் சூட்சுமமும் இந்த மதமே என்பது அனைவரும் அறிந்த இரகசியம். இந்த மதவாதங்கள் சம்பந்தமாக பல திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன, வந்த வண்ணமும் உள்ளன.

அண்மையில் வெளிவந்தது 'ஆஸ்கார்' விருதை வென்ற "Slumdog Millionaire" என்ற படத்தில் ஒரு வசனம் வரும்.கதாநாயகனால் சொல்லப்படும் அந்த வசனம் இதுவே "If it wasn't Raaman and Allah we still have our mother". அதன் அர்த்தம் யாதெனில், ராமனும் அல்லாவும் இல்லாமல் இருந்திருந்தால் என் தாய் இன்றும் உயிரோடு இருந்திருப்பாள் என்பதேயாகும். மதத்தின் மதத்தை எவ்வளவு எளிமையாக சொல்லப்படுகின்றது. அந்த ஒரு வரி விடயம் எம்முள் ஆயிரம் கேள்விகள் எழுப்புகின்றது என்பதில் ஐயமில்லை. உலகில் உள்ள சகல ஜீவராசிகளிடமிருந்தும் வேறுபட்டு உன்னதமான நிலையில் உள்ள, சிந்திக்கும் ஆற்றல் உள்ள, பகுத்தறிவுள்ள மனிதன் இன்னும் மதம் என்னும் அறியாமையில் மூழ்கி நடாத்திக்கொண்டிருக்கும் வன்முறைகளையும் பார்க்குமிடத்து நாங்கள் வெட்கித்தலை குனியவேண்டி இருக்கின்றது. எம்மை விட அறியு குறைந்த விலங்குகளுக்கு இப்படி மதங்கள் என்ற கோட்பாடுகள் இருக்குமா என்று ஆராயுமிடத்து, அவ்வாறு இல்லையென்றே சொல்லமுடிகிறது. அதனால் தான் அவை தமக்குள் தாமே மூதிக்கொல்லாமல் இருக்கின்றனவோ என்ற ஐயம் எம்மனதில் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது.

இவ்வாறு எங்களை குழப்புகின்ற சந்தேகங்களுக்கு விடை காண முற்படும்போது, நாங்கள் இந்த பூமியிலே பிறந்ததன் நோக்கம் என்ன என்று அறிய முற்படும்போது, சேவை என்ற ஒரு வார்த்தை நமக்கு தென்படுகின்றது. இதையே மறைந்த அன்னை தெரேசாவும், மறைந்த இளவரசி டயானாவும் எமக்கு சொல்லிவிட்டு சென்றார்கள். மதம் என்ற ஒரு சிறிய போர்வைக்குள் சிக்காமல், அதை விட்டு வெளியே வந்து, மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்த்து, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் மனோபாவத்தை வார்ப்போம் என்று உறுதி பூணுவோம். இந்த சந்தர்ப்பத்திலே சுவாமி விவேகானந்தர் கூறிய ஒரு கூற்றை நான் மீட்டிப்பார்க்க விரும்புகின்றேன். "நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறேன், கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். அவ்வாறே முகமதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அதுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான்.நமது இந்தச் சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய இறைவன் அருள்புரிவான் என்று நம்புகிறேன்."


Thursday, August 27, 2009

தக்கைகள் அறியுமோ நீரின் ஆழத்தை????

காலையில பத்து மணிக்கு வகுப்புக்கு
லெக்சரர் (lecturer) வாறதே 10:10 இக்கு தான்
பெடியள் பெட்டையள் வந்துசேர
பத்தரைக்கு மேலயாகும்.
ஆனா 9:50 இக்கு எல்லாம்
நான் வகுப்பறையில் ஆஜர்
ஏன் எண்டு கேட்டல்,
பாவம் தனிமையில் இருக்கும்
வகுப்பறை எண்டு....

மத்தியானம் கான்டீனுக்கு போனா,
எல்லா மேசையும் சோடி, சோடியாய்
நிறைஞ்சிருக்கும்...
தட்டுக்குள்ள எட்டிப் பார்த்தால்,
கரண்டி முள்ளுக்கரண்டியால....
கோழியையும், மாட்டையும்
மறுபடி போட்டு சாகடிச்சுக்
கொண்டிருப்பாங்கள்...
எனக்கு பாக்க பாவமாயிருக்கும்!!
பாவம் செத்தும் இதுகளை சனம்
நிம்மதியாய் இருக்க
விடுகுதில்லையே எண்டு....

மாலையானாக் காணும்,
மன்ஸஸ்டாருக்கும், லிவர்பூலுக்கும்
மேட்ச் நடக்குதெண்டு
மாஞ்சு மாஞ்சு பாப்பாங்கள்....
எனக்கு பந்தைப்பாத்தால்
பரிதாபமாக இருக்கும்
எங்களை இந்த உலகம் சேர்ந்துநிண்டு
உதைக்கிறதைபோல,
அதையும் கன கனவான்கள்
போட்டு உதைக்கிறாங்கலே....

அம்மா சீரியல் பாக்கேக்க
அடம்பிடிச்சு சனல் மாத்திபபாத்த
கிரிக்கட்டை கூட பாக்க விருப்பமில்லை
சேவாக் பந்தை சிக்ஸ்சருக்கு அடிக்கேக்க
எண்ட மனம் பதைபதைக்குது,
இந்தப் பந்து மாதிரி தான் எங்களையும்
பூமிப் பந்தில இருந்து தூக்கி எறிஞ்சிடுவங்களோ எண்டு....

சரி இரவாச்சு படுப்பமேண்டு
கண் மூடித் தூங்கினாலும்
கண்றாவி இந்தக் கனவு கூட
விடுகுதில்லையே!!!!!!!!!!!!!!

உலகம் அறியுமோ எம்மன ஆவலை??
தக்கைகள் அறியுமோ நீரின் ஆழத்தை????

Wednesday, August 26, 2009

விடியும் திசை(படித்ததில் பிடித்தது )

நினைவில் மறந்த
என் ஊருக்கு
நீண்ட நாட்களின் பின்
என் பயணம்
புழுதி படிந்த பாதை
என் ஊருக்கு
வழி காட்டியது

தெருவோரம்
படுத்திருந்த நாய்
மௌனத்தால்
அமைதி காத்தது
வரும் காலம் என்னை
புது முகமாய்ப் பார்த்தது
விழுது பரப்பிய
ஆலமரம் மட்டும்
அறிமுகமாய் சலசலத்தது

அகல விரிந்த
கல்லறைகள்
நிறைந்த வெளி
என் உறவுகளின்
இருப்பிடம் அது
என்பதை உணர்த்தியது.

அறிமுகமானவர்களை
தேடினேன் எவரும் இல்லை
அறிமுகத்துக்காகத் தேடினேன்
அதற்கும் யாரும் இல்லை

என் ஊருக்குள்
தடம் பதித்த என்
காலச் சுவடுகள்
காற்றால்
அழிக்கப் பட்டுக்கெண்டிருந்தன

குருதி படிந்து என்
நிலம் மட்டும்
நிறம் மாறி இருந்தது
என்னை அடையாளம் காண
எவரும் இருக்கவில்லை

தனிமையில் என் கால்கள்
ஊருக்கு விடை கெடுத்தன
ஊர் எல்லையில் சலசலத்த
ஆலமரம் மட்டும்
என் கால்களைத்
தடுத்தது நான் வந்த
பாதை மட்டும் அமைதியாய்
உறங்கிக் கெண்டிருந்தது

விம்மிய மனம் ஊருக்கு
விடை கெடுத்தது
பயணத்தின் இடையில்
வழி மறித்தது ஒரு கை
அடையாளத்துக்காய்
முகம் நோக்கினேன்.

தழும்புகள் அடையாளம்
மறைத்தது சிரிப்பு மட்டும்
என் இளமைக் காலத்தை
நினைவூட்டியது
குரல் அடையாளம் காட்டியது
அவன் என் நன்பன்
மீண்டும் என் இளமை
எனக்குச் சொந்தமனது

வெட்ட வெளிச்சம்....

யுத்தம் என்றால் என்ன?
அதனால் வரும்
இரத்தம் என்றால் என்ன?
இழப்பது என்றால் என்ன?
அதனை பின்பு
சகிப்பது என்றால் என்ன?
வேதனை என்றால் என்ன?
அதன் உச்சக்கடமாகிய
விரக்தி என்றால் என்ன?
இலட்சியம் என்றால் என்ன?
அதனை அடையக் கொண்ட
கொள்கை என்றால் என்ன?
பொறுப்பு என்றால் என்ன?
அதை விடுத்துச் செய்யும்
துரோகம் என்றால் என்ன?
பொறுமை என்றால் என்ன?
நாம் செய்யவேண்டிய
கடமை என்றால் என்ன?
பிறப்பு என்றால் என்ன?
ஈற்றில் வரும்
இறப்பு என்றால் என்னவென

அகராதியில் உள்ள அத்தனை
சொல்லுக்கும் அர்த்தம்
அறிந்தவர்கள் எம்மக்கள்
அர்த்தத்தின் தாக்கங்களினை
அளவுகடந்தே அனுபவித்தவர்கள்
இன்றும் கூட அனுபவித்து கொண்டிருப்பவகள்
மனச்சாட்சியை தொலைத்துவிட்டு
இல்லையில்லை புதைத்துவிட்டு
மௌனமாக நிற்கும் சர்வதேசத்திற்கே
சவால் விடக் கூடிய சக்கரவர்த்திகள்!
அகிம்சை என்று வேஷம் போடும்
அண்டை நாட்டிற்கு - அதன்
அர்த்தத்தை கற்பிக்கக்கூடிய அறிவாளிகள்!!
அவர்களும் பரந்த இப்பாரினிலே
வாழவென படைக்கப்பட்ட ஜீவன்கள்தான்
காலத்தின் கோலத்தால்,
கடவுள்கள் கபடி விளையாடும்
கந்தக பூமியிலே அவதரித்து விட்டார்கள்!!!
படைப்பவனுக்கும், அழிப்பவனுக்கும்
இடையில் நடக்கும் பந்தயத்திலே
பலிக்கடாவாக்கப்பட்டு விட்டார்கள்!!!!
இடையே தன்னிருப்பை காட்டவென
காப்பவனும் களத்திலே குதித்ததன்
விளைவு?
முத்தரப்பு போட்டியாய் இன்று
விஸ்தரித்து நிற்கின்றது.
சல்பரும் காபனும்
சங்கமமான காற்று!
பொட்டாசியமும் பொஸ்பரசும்
புதைந்து போன மண்!!
நைதரசனாலும் குளோரினாலும்
நனைந்து விட்ட நீரென!!!
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள
அத்தனை மூலகங்களும்
அங்கே ஆஜராகி உள்ளன.
வேதியியல் சோதனைக் கூடமொன்று
அங்கே விரிந்து கிடக்கின்றது.
இத்தனை சோதனைக்குள்ளிருந்தும்
சாதனை படைக்கவென ஏங்கி நிற்கின்றார்கள்..
எஞ்சி நிற்கும் மூலகமான
"தோரியத்தை" கொண்டுவந்து
கொட்டினாலன்றி - இவர்கள்
வீரியத்தை அடக்க வேறொன்றும்
இல்லையென்பது வெட்ட வெளிச்சம்....